செல்வ வளம் பெருக!
செல்வச்
செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.செல்வச்
செழிப்போடு வாழ,நமது வீட்டில்
நமது ஆடைகள்,துணிகள்
சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு
வைப்பது அவசியம்.
நமது
வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும்
நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான
செலவுகளும் குறையும்.
ஒருபோதும் நாம்
வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்;
நாசமாகப் போச்சு; முடியாது;விளங்காது
= இதுமாதிரியான அவச்சொல்லை
எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை
இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
பிரதி வெள்ளிக்கிழமைகளில்
மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட
வேண்டும்.அலசியபின்னர், நமது
வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை
நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும்
இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த
உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
குளிக்கும்போதும்,
தூங்கும் போதும்
நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி
நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை
விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய
இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின்
வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
எக்காரணம்
கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள்
பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை
அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
ஒரு போதும்
வீட்டில் பெண்கள் அழக்கூடாது.அவர்கள் அழுதால்,வீட்டில் செல்வ வளம் தங்காது.
கரடு முரடான ராக்
இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய
இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாட இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக
இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி
வரும்.
மூன்று
நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு
குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல்
அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை!
தினமும் வீட்டில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே
சமயம்,அசைவம் சாப்பிடுவதை
அடியோடு கைவிட வேண்டும்.
ஒரு
எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம்
எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம்
வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு வருடம்
ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம்
ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய
முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி
கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.
வெள்ளிக்கிழமைதோறும்
மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே
வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும்.
வீட்டில் ஏற்றும்
காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை
புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
வீட்டில் பல வித
ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன்
ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு
வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று
வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப்
பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு
ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள்
வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை
பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து
நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும்.
தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித்
நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம்
பெறபணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர்
ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால்
சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
பசுவின்
கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல்
செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி
பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து
வர பணத்தடைநீங்கும்.
பெண்கள் இடது
கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர
ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம்
வரும்.
பாசிப்பருப்பை
ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை
ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
தினசரி
குளிக்கும் முன் பசுந்தயிரை உடல்
முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன்
முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
அம்திஸ்ட் கல் 10
கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
குடியிருக்கும்
வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம்
இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
வீட்டில் தலை
வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஐஸ்வர்ய தூப
பொடியுடன், துளசி பொடியுடன்
சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
சுக்ர ஓரையில்
உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம்
சேரும்.
சுத்தமான நீரில்
வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம்
சேரும்.
சுக்ர ஓரையில்
மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
பசுவுடன் கூடிய
கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
வயதான
சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
மஞ்சள் நீருடன்,
வாசனை திரவியம் கலந்து
வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும்
தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
ஆந்தை படத்தினை
தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
தங்க நகை அணிந்த
திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை
எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
தனாகர்ஷண
தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
.
சம்பாதிப்பதில்
ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம்
வந்து சேரும்.
ஸ்ரீ ரங்கநாத
பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர
பணம் வரும்.
அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை
வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின்
மடங்குகள் பணம் வரும்.
ஆந்தையை வழிபட
பணம் கிடைக்கும்.
ஜோடி கழுதை படம்,
ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
தனாகர்ஷண மூலிகை
சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
பசுவின் பிருஷ்ட
ஸ்பரிசம் தனம் தரும்.
திருமணம் ஆன
பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று
அணிய கூடாது,அணிவதால்
ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும்.
வீட்டில்
தரித்திரத்தை தவிர்த்து செல்வ செழிப்போடு வாழ
இவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.குறிப்பாக
பெண்கள்…!!!
ஒருவருக்கு பணம்
கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும்
வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க,
விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.
கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க
இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
வாசற்படி,
உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. இரவு
நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல
அனுமதிக்கக் கூடாது.
எரியும்
குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும். வீட்டில் யாரையும்
சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
அதிகமாகக்
கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. உங்கள் வீடுகளில்
லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக, வெற்றிலை, வாழையிலை இவைகளை
வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
சுமங்கலிகள்,
பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும்
பிடித்தவை.
செல்வம் நிலைத்து
நிற்க, நமது வீடுகளில் வெள்ளை
புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய்,
பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
காலை எழுந்தவுடன்
தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை
பார்க்கவேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது
அமங்கலச் சொல்லாகும்.
எந்த வீட்டில்
சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
வீட்டுக்கு வரும்
சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல
ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். எந்தப் பொருளையும் இல்லை,
இல்லை எனக் கூறக் கூடாது.
இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம். பெண்கள்
வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசையன்று
எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை
உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது
அவசியம்.
கோலம் இட்ட
வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில்
வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
சாம்பிராணி
உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும். ஈரத் துணி
அணிந்து பூஜை செய்யக்கூடாது.
பெண்கள்
மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
தங்கம் எனப்படும்
சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள்
அணியக்கூடாது.
பெண்கள்
மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
விளக்கு வைக்கும்
நேரம் வீட்டில் படுத்து உறங்குதல் கூடாது.
செல்வச்
செழிப்போடு வாழ,நமது வீட்டில்
நமது ஆடைகள்,துணிகள்
சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு
வைப்பது அவசியம்.
வெள்ளிக்கிழமைகளில்
மாலை 5 மணிக்குள் நமது வீட்டை
பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும். அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை
நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது
வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும்
இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த
உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
வெள்ளிக்கிழமைகளில்
கடையில் எண்ணெய் வாங்கக்கூடாது.
இதையெல்லாம்
செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்..
பணம்
பலமடங்கு பெருக வேண்டுமா?... வெளிநாடுகளில் செய்யும் ரகசியம்
இதோ...
நாளுக்கு நாள்
விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு
பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக்
கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.
மூட
நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு
அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி
அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக
மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த மாதிரியான
மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும்,
எல்லா இடங்களிலும்
காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு
மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.
ஜப்பான்
ஜப்பான் நாட்டு
மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை
கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும்
புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும்,
வீட்டில் பணம் வைக்கும்
பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள்.
அப்படி
வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின்
நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை
கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன
ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.
கொரியா
நம்மவர்கள்
முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே
வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல்
மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு
வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே
செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட்
ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து
தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பிரேசில்
பிரேசில் நாட்டை
எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த
ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு
முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும்
கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.
காபியோ அல்லது
டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும்
என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா
பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும் அங்கே காலம் காலமாக
வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது
காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால்
அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.
மெக்ஸிகோ
நம்ம ஊரில்
நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள்
முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில்
வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து
சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
ஆகும்.
பணப்பையை பணம்
ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக்
கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை
Comments
Post a Comment